Saturday, July 18, 2026
Home Uncategorized 300-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரிந்த 'ட்ரோன்மேன்' அரவிந்த், தேசிய அளவிலான ட்ரோன் விருதைப் பெற்றுள்ளனர்

300-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரிந்த ‘ட்ரோன்மேன்’ அரவிந்த், தேசிய அளவிலான ட்ரோன் விருதைப் பெற்றுள்ளனர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளைப் பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் எம். அரவிந்த் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அவர், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘LIK’, ‘வேட்டையன்’, ‘பைசன்’, ‘விடுதலை’, உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ட்ரோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் கதைக்கேற்ற வான்வழி காட்சிகளை துல்லியமாக பதிவு, திரைப்படங்களுக்கான ட்ரோன் காட்சிப் பதிவுகளை (stock shots) வழங்குகிறார்.” திரைப்பட உலகில் “ட்ரோன்மேன்” என்ற பெயரால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள South Asian Media School-இன் Fellow-ஆகவும் இருந்துள்ளார். திரைப்படங்களில் பெற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர வேண்டும் என்ற எண்ணத்தில், ZOO Studios India நிறுவனத்தின் கீழ் DroneMan Academy-யை உருவாக்கினார். “ட்ரோன் என்பது வெறும் கேமரா இயக்கும் கருவி மட்டுமல்ல; எதிர்கால தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்ரோன் பயிற்சி முகாம்களை நடத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்கியுள்ளார். குறிப்பாக EDII MediaDrone உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய பயிற்சிகள் மூலம், ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஆராய்ச்சி மற்றும் புதுமை நோக்கி வழிநடத்தி வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற பலர் இன்று திரைப்படத் துறையிலும், ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

வெறும் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் சென்னை வண்டலூரில் நவீன ட்ரோன் ஆய்வகத்தையும் நிறுவியுள்ளார். ட்ரோன்களை வடிவமைத்தல், நிரலாக்கம், சோதனை மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாடுகள் வரை அனைத்தையும் மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ளும் சூழலை அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, மாணவர்களை வேலைவாய்ப்புக்குத் தயாரான திறமையாளர்களாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட மாணவர்கள் சமீபத்தில் தேசிய அளவிலான முதல் NIDAR ட்ரோன் 2025-26 போட்டியில், இரட்டை வெள்ளி விருதுகளை வென்று கவனம் பெற்றனர். அந்த வெற்றியை தனது சாதனையாக அல்லாமல், தமிழக இளைஞர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே அரவிந்த் குமார் கருதுகிறார். கிடைத்த பரிசுத் தொகையையும் மீண்டும் DroneMan Academy ஆய்வக வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவு செய்திருப்பது, மாணவர்களின் எதிர்காலமே தனது மிகப்பெரிய முதலீடு என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு சாதாரண ட்ரோன் கேமராமேனாக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று அவருடைய ட்ரோன் அகாடமி முக்கியமாக தமிழ் ஒளிப்பதிவாளர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” திரைப்பட உலகிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையிலும் தனித்துவமான தடம் பதித்திருக்கும் எம். அரவிந்த் குமார், தனது அனுபவத்தை அடுத்த தலைமுறையின் வெற்றியாக மாற்றிக் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டியாக திகழ்கிறார்.



2017-ஆம் ஆண்டு, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் (Nirav Shah) அறிவுரையின் பேரில், அவர் தமிழ் சினிமாவில் தனது ட்ரோன் (drone) பயணத்தைத் தொடங்கினார்.

2014 முதல் 2017 வரை, அவர் அமெரிக்காவில் உள்ள பல இந்திய சங்கங்களின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு ட்ரோன்களைப் பறக்கவிடும் பழக்கம் அறிமுகமானது.

“டிரோன் பெடரேஷன் ஆஃப் இந்தியா (Drone Federation of India)விடமிருந்து விருது பெற்றதற்காக, அவரது DRONEMAN ACADEMY குழுவின் சாதனையையும் தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது.” வரவிருக்கும் India’s NIDAR 2.0 ட்ரோன் போட்டிக்காக, பொறியியல் கல்லூரிகளில் இருந்து 10 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த அகாடமி திட்டமிடுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments