Tuesday, June 23, 2026
Home Uncategorized விடாத அடை மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவி

விடாத அடை மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவி

ரஜினி,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்

ரஜினி விஜய் உதவி செய்யுங்கள் 10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை 200 பேருக்கு ரெயின்கோட் …
500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்….

டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை வைக்க 10 பேருக்கு தள்ளு வண்டிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் புலி பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் வழங்கினார்.

மழையாலும், வெயிலாலும், தொழில் செய்ய முடியாமல் அவதிப்படும் 100-நடைபாதை ஏழை வியாபாரிகளுக்கு ராட்சஷ குடைகளும், 200-பேருக்கு ரெயின் கோட்டுகளும், 500 ஏழை மீனவ பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். இந்த மாதிரி தவிர்க்க முடியாத வேளையில் வேலை பார்க்க முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகள் செய்வதை இறை தொண்டாக நினைக்கிறேன்.
கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுங்கள் கடவுள் உங்களை உயர்த்துவார். பல ஏழைகள், தினசரி கூலிகள், நிலை குலைந்து உள்ளனர். இந்த மாதிரி கடினமான சூழலில் தொழிலாளிகள், விவசாயிகளுக்கு, பணம் படைத்த நல் உள்ளங்கள் உதவ முன் வாருங்கள். குறிப்பாக நடிகர் ரஜினி, கமல், விஜய் அஜித், த்ரிஷா, நயன்தாரா,போன்றோர்களை அதிரடியாக உதவி செய்ய அழைக்கிறேன்.

விடாத அடை மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments