Monday, July 27, 2026
Home Uncategorized தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுட சுட உணவு செய்து கொடுக்கும் கனிமொழி கருணாநிதி எம்பி

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுட சுட உணவு செய்து கொடுக்கும் கனிமொழி கருணாநிதி எம்பி

வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டம், மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் சார்பாக தூத்துக்குடியில் சுட சுட உணவு சமைக்கப்பட்டு கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இன்று 25,000 மேற்பட்ட நபர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இதேபோல் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்திலும் உணவு சமைத்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி சார்பாக அதனை ஒட்டிய சுற்று வட்டார பகுதிகளில் வாகனம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

இதேபோல், மதுரையிலும் இரவு முழுவதும் உணவு சமைக்கப்பட்டு கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வாகனம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக உணவு கொடுக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments