Monday, July 27, 2026
Home Uncategorized கர்ப்பிணி பெண்ணை வாகனம் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார் கனிமொழி கருணநிதி எம்.பி

கர்ப்பிணி பெண்ணை வாகனம் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார் கனிமொழி கருணநிதி எம்.பி

வெள்ளப் பாதிப்பில் சிக்கிய‌ கர்ப்பிணியை நேரில் சென்று வாகனம் மூலம் மீட்டு மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி சேர்த்தார்.

தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவு பாதிப்பை சந்தித்ததுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி தூத்துக்குடி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

கர்ப்பிணி பெண்மணியை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி, அவரும் அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண்மணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழி கருணாநிதி அவரக்ளுக்கு நன்றி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments