Sunday, March 8, 2026
Home Uncategorized சினிமா இயக்குநர் ஷண்முகப்ரியன் உடல் நலக்குறைவால் இன்று காலை இயற்கை எய்தினார்.

சினிமா இயக்குநர் ஷண்முகப்ரியன் உடல் நலக்குறைவால் இன்று காலை இயற்கை எய்தினார்.

தனது பதின்பருவத்திலேயே சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்,நாடகங்கள் எழுதியவர் இவர்.

அவர் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் கைவண்ணத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976ல் உருப்பெற்றது. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்காக மாநில விருது பெற்றார்.

அவரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முதலில் வெளிவந்த “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம் 1980களில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்கியது.

வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஷண்முகப்ரியன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments