Saturday, March 7, 2026
Home Uncategorized திகில்‌ மர்மம்‌ நிறைந்த புதிய திரைப்படம்‌ நோக்க நோக்க...

திகில்‌ மர்மம்‌ நிறைந்த புதிய திரைப்படம்‌ நோக்க நோக்க…

இப்படத்தில்‌; இணையத்தில் கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்குவதாக திரைக்கதை அமைத்துள்ளனர்.


R புரடக்ஸன்ஸ் மற்றும்‌ AVP சினிமாஸ்‌ சார்பில்‌ R.முத்துக்குமார்‌ திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இவர்‌ தமிழில்‌ ஏற்கனவே தொடக்கம்‌, வெண்ணிலாவின்‌ அரங்கேற்றம் தெலுங்கில்‌ ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.


நோக்க… நோக்க தணிக்கை செய்யப்பட்டு UA சான்றிதழ் பெற்றுள்ளது. அடுத்த மாதம்‌ திரைக்கு வருகிறது. கதாநாயகனாக புது முகம்‌ அர்ஜீன்‌ சுந்தரம்‌ அறிமுகமாகிறார்‌. கதாநாயகன்‌ கதாநாயகி நேர்மறை (anti) கதாபாத்திரங்களாக தோன்றுகிறார்கள்‌.
தொலைக்காட்சி ஊடகத்தில்‌ பணிபுரியும்‌ நேர்மையான நிருபர் பிரதிமா (ஜோதிராய்)‌ இந்தியாவில்‌ பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில்‌ நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும்‌ வேளையில்‌ சமூக விரோதிகளால்‌ கொலை செய்யப்படுகிறாள்‌. அவளது ஒரே மகளையும்‌ கொன்று விடுகின்றனர்‌. நாயகியின்‌ பெண்‌ குழந்தை எப்படி அந்த கயவர்களை பேயாக உருமாறி பழிவாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதை படத்தின்‌ இயக்குநர்‌ R.முத்துக்குமார்‌ அவர்கள்‌ சிறப்பாக படமாக்கியுள்ளார்‌. இப்படத்தில்‌ கஞ்சா கறுப்பு, ஜாக்குவார்‌ தங்கம்‌, பாவனா, சிந்தியா, ஜோதிராய், சுரேஷ்‌, அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா ஆகியோர்‌ முக்கிய கதாபாத்திரங்களில்‌ நடித்துள்ளனர்‌.
நவீன ஸ்மார்ட் போன் உபயோகம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கஞ்சா கருப்பு நகைச்சுவையாக சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒளிப்பதிவு : விஜய்‌ முத்துசாமி


இசை : ஆல்டிரின்‌, எடிட்டிங்‌ : அரவிந்‌த்,
திரைக்கதை, இயக்கம்‌ R.முத்துக்குமார்‌, ; இணை தயாரிப்பு : வெங்கட்ராமன்‌, தயாரிப்பு – ஆர்‌ புரடக்க்ஷன்ஸ்‌ மற்றும்‌ AVP சினிமாஸ்‌.
PRO: கணேஷ் ‌(9380265147)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments