Saturday, August 29, 2026
Home Uncategorized இரண்டு கோடி ரசிகர்கள் எங்களின் இலக்கு!

இரண்டு கோடி ரசிகர்கள் எங்களின் இலக்கு!

அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு’ என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை!

அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.

இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார்.

தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை கூறினார்.

இன்று நடைப்பெற்ற மகளிர் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.

விழாவில், லெஜன்ட் சரவணன் அவர்களுக்கென்று, ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தனி பாடல் ஒன்று, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

இறுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது!

@GovindarajPro

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments