Monday, June 15, 2026
Home Uncategorized புதிய பொலிவில் மறுதிறப்பு விழா கொண்டாடிய ஜோய்ஆலுக்காஸ் குரோம்பேட்டை ஷோரூம்

புதிய பொலிவில் மறுதிறப்பு விழா கொண்டாடிய ஜோய்ஆலுக்காஸ் குரோம்பேட்டை ஷோரூம்

அறிமுக விழாவை முன்னிட்டு செய்கூலி / சேதாரத்தில் ஃபிளாட் 40% தள்ளுபடி

ஜூன் 21 வரை வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக சிறப்பு சலுகைகள்

சென்னை, ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர்  ஜோய்ஆலுக்காஸ், குரோம்பேட்டையில் அமைந்துள்ள தனது முக்கிய ஷோரூமை புதிய பொலிவுடனும் மேம்பட்ட வசதிகளுடனும் மறுதிறப்பு செய்து வைத்துள்ளது. பாரம்பரிய நகைக் கலையின் அழகையும், உலகத் தரம் வாய்ந்த நவீன ஷாப்பிங் அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த மறுவடிவமைக்கப்பட்ட ஷோரூம், சென்னையில் ஜோய்ஆலுக்காஸின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த சிறப்பு தருணத்தைக் கொண்டாடும் வகையில், தங்கம், சான்றளிக்கப்பட்ட வைரம் (Cut & Uncut), பிளாட்டினம், பிரஸ்ஸியஸ் ஸ்டோன் நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேதாரம் / செய்கூலியில் ஃபிளாட் 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அறிமுகச் சலுகை 2026 ஜூன் 21 வரை செல்லுபடியாகும்.

வாடிக்கையாளர்களுக்கு மேலும் செழுமையான அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம், விசாலமான உட்புற அமைப்பு, நேர்த்தியான அலங்காரம், தனிப்பட்ட ஆலோசனைக்கான பிரத்யேக பகுதிகள் மற்றும் உயர்தர வாடிக்கையாளர் மைய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

காலத்தால் அழியாத பாரம்பரிய வடிவமைப்புகள், பிரம்மாண்டமான திருமண நகைத் தொகுப்புகள் மற்றும் சமகால சர்வதேச டிரெண்டுகளை பிரதிபலிக்கும் புதிய சேகரிப்புகள் என விரிவான தேர்வுகள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு நகையும் ஜோய்ஆலுக்காஸின் தனித்துவமான வடிவமைப்புத் தரத்தையும் சான்றளிக்கப்பட்ட தூய்மையையும் பிரதிபலிக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ்,

“இந்தியாவின் நகை மரபில் சென்னை தனித்துவமான இடத்தைப் பெற்ற நகரமாகும். இந்த நகரத்தில் எங்களது இருப்பை மேலும் வலுப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய பொலிவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள குரோம்பேட்டை ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கான எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். சிறப்பான வடிவமைப்பு, சான்றளிக்கப்பட்ட தூய்மை மற்றும் தனிப்பட்ட சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மேலும் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ஷோரூம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை எங்களுடன் கொண்டாடிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றார்.

புதிய பொலிவில் ஜொலிக்கும் ஜோய்ஆலுக்காஸ் குரோம்பேட்டை ஷோரூமுக்கு வருகை தந்து அறிமுகச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments