Saturday, March 14, 2026
Home Uncategorized இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் பி. சக்திவேலன் (சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோர் இன்று அகவெளி...

இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் பி. சக்திவேலன் (சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோர் இன்று அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாட்டை தொடங்கி வைத்தனர்!

மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவம் காப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாடு இன்று விமர்சையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அங்கு சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது, “அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா, “அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments