Monday, July 13, 2026
Home Uncategorized உலகத்தர ஷாப்பிங் அனுபவத்திற்கு ஜோயாலுக்காஸ் இரண்டாவது மற்றும் புதிய ஷோரூமை வேளச்சேரியில் தொடங்கியுள்ளது

உலகத்தர ஷாப்பிங் அனுபவத்திற்கு ஜோயாலுக்காஸ் இரண்டாவது மற்றும் புதிய ஷோரூமை வேளச்சேரியில் தொடங்கியுள்ளது

சென்னை, ஜூலை 2024 உலகின் ஃபேவரிட் ஜுவல்லரி ஜோயாலுக்காஸ் சென்னை வேளச்சேரியில் இரண்டாவது ஷோரூமை 27 ஜூலை 2024 அன்று பிரமாண்டமாக திறந்துவைத்துள்ளது. இந்த அற்புதமான விரிவாக்கத்துடன் நேர்த்தியான ஜுவல்லரி கலெக்ஷன்கள் மற்றும் சிறந்த ஷாப்பிங் அனுபவங்களை வேளச்சேரியில் உள்ள அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறது. இந்த திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்
இந்த புதிய ஷோரூம் சர்வதேச அழகியலுடன் கூடிய மில்லியன் கணக்கான டிசைன்கள் மற்றும் கலெக்ஷன்களை காட்சிப்படுத்துகிறது. தலைசிறந்த வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையையும் அளிக்கிறது
சென்னையின் இதயப் பகுதியான வேளச்சேரியில் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்புடன் விரிவாக்கப்பட்ட இந்த ஷோரூம், அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் அதனுடன் விருது பெற்ற மல்டி பிராண்டு ஜுவல்லரிகளையும் காட்சிப்படுத்துகிறது. அற்புதமான, மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட விதவிதமான ஆபரணங்கள் வாடிக்கையாளரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈடுஇணையற்ற, விதவிதமான ஜுவல்லரி கலெக்ஷன்களை அளிப்பதன் வாயிலாக ஜோயாலுக்காஸ் தனது கம்பீரமான பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. கலாச்சார நகைகளின் ஸ்டைல் முதல் நவீன நகைகளின் ஸ்டைல் வரை விதவிதமான வகைகளில், அனைத்து விசேஷங்களுக்கும் ஏற்ற ஒரு தேர்வாக இங்கு உள்ள நகைகள் அமைந்திருக்கிறது.
அனுக்கிரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டைமண்ட்ஸ், எலிகன்ஸா, போல்கி டைமண்ட்ஸ், யுவா, எவ்ரிடே ஜுவல்லரி, அபூர்வா, ஆண்ட்டிக் கலெக்ஷன், ரத்னா, ப்ரஸ்சியஸ் ஸ்டோன் ஜுவல்லரி என்று பல்வேறு விதமான பிராண்டுகள் கொண்ட ஆபரண மாளிகையாக இந்த ஷோரூம் ஜொலிக்கிறது தங்கம் வைரம் என்று அனைத்து விதமான ஆபரணங்களிலும் 2024-ன் புத்தம் புதிய டிசைன்களின் வரவுகளும் ஷோரூமை அலங்கரிக்கிறது.
வேளச்சேரியில் இரண்டாவது ஷோரூம் திறப்பு விழா குறித்து ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் எம்.டி & சேர்மன்
திரு ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், வேளச்சேரியில் எங்களின் இரண்டாவது ஷோருமை ஆரம்பித்ததில்
நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம், இதன் மூலம் உலகத் தர ஜுவல்லரி ஷாப்பிங் அனுபவத்தை இன்னும்
அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் அளவில்லா ஆனந்தம் கொள்கிறோம். எங்கள்
ஷோரூமின் இந்த திறப்பு விழாவின் மூலமாக உலகை ஆபரணமயமாக்கும் எங்கள் குறிக்கோளை நோக்கி
நாங்கள் பயணிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். வாடிக்கையாளர்களான தங்கள் அனைவரையும்
ஜோயாலுக்காஸின் இந்த புதிய இந்த புதிய ஷோரூமிற்கு பேரன்போடு வரவேற்கிறோம். உலகத்தரம் வாய்ந்த
ஜுவல்லரி அனுபவத்தை நீங்கள் எப்போதும் பெற்று மகிழ தலை சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் நாங்கள்
உறுதுணையாக இருக்கிறோம்.”என்று தெரிவித்தார்.
வேளச்சேரி ஷோரூமின் இந்த ஆரம்பத்துடன் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான
நகைகள் மற்றும் சேவையை வழங்கும் ஜோயாலுக்காஸின் குறிக்கோளில் ஒரு குறிப்பிடத்தக்க
முன்னேற்றத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஷோரூம் ஒரு அதிநவீன மற்றும் வசதியான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விரும்பமான நகைகளை தேர்தெடுப்பதற்கு
உதவ எங்கள் குழு தயாராக உள்ளது என்று ஜோயாலுக்காஸ் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments