Sunday, July 26, 2026
Home Uncategorized சகோதரா…..வந்தாய்…வென்றாய்…வாழ்வாய் பல நூறு ஆண்டு இறந்தும் இறவாப்புகழுடன். வி செ.குகநாதன்.

சகோதரா…..வந்தாய்…வென்றாய்…வாழ்வாய் பல நூறு ஆண்டு இறந்தும் இறவாப்புகழுடன். வி செ.குகநாதன்.

தமிழ் சொந்தங்களே……! இரக்க குணம்….உறுதியான மனம்…களங்களைக் கண்டு கலங்காத வீரம்…ஏழைகளுக்கு உதவுகின்ற ஈரநெஞ்சம்…..ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு தேவையான பணிவு துணிவு கனிவு…..இவர் விரல் காட்டும் திசையில் வேங்கை என பாய தயாராக இருந்த லட்சோப லட்சம் தொண்டர்கள்…..மக்களைப் புரிந்து கொண்டு நடக்கும் தலைவனாக…..ஐயோ தமிழர்களே…..அடைய வேண்டிய இடத்தில் கேப்டன் விஜயகாந்த்தை அமர வைக்க தவறிவிட்டீர்களே! காலமகள் கண்ணயர்ந்த நேரத்திலே…..காலம் செய்த கோரக்கொடுமையினாலே…..தமிழக மக்கள்……ஒரு நல்ல முதல்வரை அடையாளம் காட்டத் தவறி விட்டனர்! உண்மைகள் ஊமையாகக் கிடந்த நேரத்திலே….தீமைகள் தீ போல் பரவி….தியாக அரசியல் மரித்து விட…பண அரசியல் பதவிகளை பறித்து விட…..திசை மாறாமலே இருந்திருக்கும் திராவிட அரசியல்…..இந்த மனிதர் மட்டும் அன்று தமிழக முதல்வராக வந்திருந்தால்! நண்பர் கேப்டன் விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் மட்டுமல்ல….திராவிட அரசியலின் ஆதரவாளர்….அதனால் தான் அவரது கட்சியின் பெயர் தேசிய முற்போக்கு திராவிட கழகமானது! அனைவராலும் மதிக்கப்பட்ட மனிதராக…கலை உலகின் கேப்டனாக….கறுப்பு எம்ஜிஆராக….எதிர்க்கட்சி தலைவராக….வாழ்ந்து மறைந்த என் இனிய சகோதரா…..வந்தாய்…வென்றாய்…வாழ்வாய் பல நூறு ஆண்டு இறந்தும் இறவாப்புகழுடன். வி செ.குகநாதன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments