Monday, July 27, 2026
Home Uncategorized மார்கழியின் மாபெரும் இசை திருவிழா!

மார்கழியின் மாபெரும் இசை திருவிழா!

4 ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை!

மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயணம். கலை ஒரு மாபெரும் புரட்சி என்ற ஒற்றை வடிவத்தில் பண்பாட்டு மீட்ச்சியாக, இசைத்துறையில் வெள்ளை ஆதிக்கத்தை வேரறுத்து, அமெரிக்காவில் தனது எல்லைகளற்ற கலையின் மூலம் இசை புரட்சியை ஏற்படுத்தினர் கறுப்பின கலைஞர்கள். அவ்வகையில் கலை மூலம் கவர்ந்தமைத்த இந்த மக்களிசை மேடை ,கலைஞர்களை ஒரு பாடகராக , நடனக்காரராக, இசைக்கலைஞர்களாக மேடையேற்றி மக்களிசையின் எண்ணோட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் மக்களிடையே கொண்டு சேர்க்க ,மருவி உருவான நிகழ்ச்சியே மார்கழியில் மக்களிசை.

மார்கழியின் மக்களிசை நிகழ்வின் சிறப்பம்சமாக வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஓங்கி ஒலித்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘மக்களிசை மாமணி” விருது வழங்கப்படும். இதுவரை 13 கலைஞர்கள் மக்களிசை மேடையில் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட கலைஞர்கள்,15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 100 க்கும் மேற்பட்ட திரை மற்றும் அரசியல் பிரபலங்களோடு கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் கே.ஜி.எஃப் மற்றும் ஓசூர் பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக மக்களின் ஆரவாரத்தோடு நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் வரும் 28\ 29\ 30 ஆகிய தேதிகளில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த 3 நாள் நிகழ்ச்சியில் பல்வகையான பறையிசை நிகழ்வுகள், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் பழங்குடியின மக்களின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான ஒப்பாரி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் அதோடு கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும் ராப் இசை, மற்றும் கானா இசை, அறிவு & அம்பாசா குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு மிக பிரம்மாண்டமாக இந்தாண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இடம்; சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, சுல்லிவன் தெரு, குயில் தப்பு, மயிலாப்பூர், சென்னை

அனைவரும் வாருங்கள் ! மார்கழியில் மக்களிசையை ! கொண்டாட தயாராவோம் !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments