Monday, July 27, 2026
Home Uncategorized மழை வெள்ளத்தை கிண்டல் செய்வதும், குறை கூறியும் வெட்டிப் பேச்சு பேசும் நடிகர்களுக்கு நடுவே நடிகர்...

மழை வெள்ளத்தை கிண்டல் செய்வதும், குறை கூறியும் வெட்டிப் பேச்சு பேசும் நடிகர்களுக்கு நடுவே நடிகர் KPY பாலா உயர்ந்து நிற்கிறார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நேரில் சென்று நிதியுதவி அளித்துள்ளார் பாலா. வகையில் சமீபத்தில் Kpy பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ‘ என்ன வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி. 2015ல் மழை வந்த போது செய்யணும்னு ஆசை இருந்தது ஆனா அப்போ காசு இல்ல. அதனால் தான் இப்போ என் அக்கவுண்டில் இருந்த சுமார் 2.15 லட்ச ரூபாயை எடுதது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000ரூ கொடுத்து இருக்கிறேன்’ என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே இலவச ஆம்புலன்ஸ், குழந்தைகளின் படிப்புக்கு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, நலிந்த கலைஞர்களுக்கு உதவி என்று செய்து வரும் Kpy பாலா தற்போது செய்துள்ள இந்த உதவியும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments