Sunday, March 8, 2026
Home Uncategorized புலவர் இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

புலவர் இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

தேதி : 09-08-2033
ஆழ்ந்த இரங்கல்

50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து  100க்கும் மேற்பட்ட  நூல்களை எழுதியவரும்,  முதன் முதலில் அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு  பல அரிய வரலாற்று தகவல்களை  அளித்தவரும், இன்றும் பல ஆயிரம் விவசாயிகள் பயனடையும் காலிங்கராயன் வாய்க்காலின் வரலாற்றையும் அதன் அறிவியலையும் தரவுகளோடு முதன் முதலில் எழுதியவருமான வரலாற்று ஆய்வாளர்,  கல்வெட்டு அறிஞர், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி  பெரும் வருத்தம் அளிக்கிறது..

அவருடைய இழப்பு தொல்லியல் மற்றும் வரலாற்று துறைக்கு மட்டுமன்றி வருங்கால சந்ததியினருக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். 

புலவர் இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். 

அய்யா அவர்களின் மறைவுக்கு உழவன் ஃபவுண்டேஷன் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

கார்த்தி சிவகுமார்,
நிறுவனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments